ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

செந்தலையில் ரத சப்தமி தீர்த்தவாரி விழா

தஞ்சாவூர் மாவட்டம்,  திருக்காட்டுப்பள்ளி அருகே செந்தலை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில்

Updated On :13 பிப்ரவரி 2019, 9:29 am IST

தஞ்சாவூர் மாவட்டம்,  திருக்காட்டுப்பள்ளி அருகே செந்தலை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ரத சப்தமி பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், குடமுருட்டி ஆற்றில் தீர்த்தவாரியும், பின்னர் வீதி உலா, வையாளி,  புஷ்பாஞ்சலி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதில், கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.