பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கிராம உதவியாளர்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி திங்கள்கிழமை இரவு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் அ.கா. தங்கராசு பேசியது: கஜா புயலின்போது நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த, வருவாய் கிராம ஊழியர்கள் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டனர். இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை.
மேலும், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் புகார் கொடுத்தவர்களையே மிரட்டியது கண்டிக்கத்தக்கது என்றார்.
சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.பி. மாரிமுத்து, மாநில பொதுச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வம், மாநில துணைத் தலைவர் ஏ.சி.வின்சென்ட், மாநில அமைப்புச் செயலாளர் வி.நல்லதம்பி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் பி.பார்த்தசாரதி, அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சிவ.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வாரம் கலாரசிகன் - 17-05-2026

சிஎஸ்கேவின் சாதனையை முறியடித்த ஆர்சிபி!

கலம் தொடா மகளிர்

வெங்கடேஷ் ஐயர், விராட் கோலி அரைசதம்; பஞ்சாப் கிங்ஸுக்கு 223 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
