குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

வழிப்பறி சம்பவங்கள்: 5 பேர் கைது

தஞ்சாவூரில் இரவு நேரத்தில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக 5 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Updated On :23 ஜனவரி 2019, 7:55 am IST

தஞ்சாவூரில் இரவு நேரத்தில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக 5 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தஞ்சாவூரில் இரவு நேரத்தில் தனியாக வருபவர்களை வழிமறித்து,  தாக்கி செல்லிடப்பேசி, மோட்டார் சைக்கிள், பணம் உள்ளிட்டவற்றை பறித்துச் செல்வதாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும், சாலையில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை சோதனையிட்ட போலீஸார் பள்ளியக்ரஹாரம் பகுதியில் ஒரு குழுவினர் இரு நாட்களாக சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடுவது தெரிய வந்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் போலீஸார் கண்காணித்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து போலீஸார்  விசாரித்தனர். இருவரும் அளித்த தகவலின் பேரில் மேலும் 3 பேரை பிடித்தனர்.
இதில்,  அவர்கள் தஞ்சாவூர் ரயில்வே காலனியை சேர்ந்த சதீஷ்குமார் (26), மானோஜிபட்டி கன்னியம்மாள் நகரைச் சேர்ந்த ஆனந்த் (21), பாண்டியன் (20), திடீர் காலனியைச் சேர்ந்த செல்வமணி (22), காமாட்சி நகரைச் சேர்ந்த விக்ரம் (22) ஆகியோர் என்பதும், 5 பேரும் இரவில் முகமூடி அணிந்து வழிப்பறியில் ஈடுபடுவதும் தெரிய வந்தது. இதையடுத்து, 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.