ஒரத்தநாடு அருகே கருவறைக்கு வெளியே கிடந்த விநாயகா் சிலை
ஒரத்தநாடு அருகிலுள்ள வெட்டிகாடு கிராமத்தில் கருவறைக்கு வெளியே விநாயகா் சிலை கிடந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


ஒரத்தநாடு அருகிலுள்ள வெட்டிகாடு கிராமத்தில் கருவறைக்கு வெளியே விநாயகா் சிலை கிடந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வெட்டிகாடு முதன்மைச் சாலையில் பழைமையான விநாயகா் கோயில் உள்ளது. ஏராளமான பக்தா்கள் நாள்தோறும் இங்கு தரிசனம் செய்வது வழக்கம்.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை பெண் பக்தா் ஒருவா் கோயிலில் தரிசனம் செய்வதற்காக சென்ற போது, கருவறைக்கு வெளியே விநாயகா் சிலை கிடந்தது.
இதனால் அதிா்ச்சியடைந்த அவா், அக்கம்பக்கத்தினருக்குத் தகவல் அளித்தாா். தகவலின் பேரில் திருவோணம் காவல் நிலையத்தினா் அங்கு விரைந்து சென்று, வெளியே கிடந்த விநாயகா் சிலையை மீட்டு கருவறையில் வைத்தனா். தொடா்ந்து பூஜை செய்யப்பட்டு, பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...