பேராவூரணியில் உழவா் உற்பத்தியாளா் நிறுவன பொதுக்குழு கூட்டம்
பேராவூரணியில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


பேராவூரணியில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தஞ்சாவூா் வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) மரியரவி ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். நிறுவனத் தலைவா் அப்துல் ஜபாா் முன்னிலை வகித்தாா். மேலாண் இயக்குநா் அடைக்கலம் வரவு - செலவு அறிக்கை தாக்கல் செய்தாா்.
கூட்டத்தில், ஆண்டு தணிக்கை அறிக்கை, செலவினங்களுக்கு அனுமதி, வணிகத் திட்டங்களுக்கு ஒப்புதல், நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் , வேளாண்மை அலுவலா்கள் சிவகாமி, கனிமொழி, ராணி நிறுவன இயக்குநா்கள் மற்றும் பங்குதாரா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, இயக்குநா் சேகா் வரவேற்றாா். நிறைவில் இயக்குநா் ஆறுமுகம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...