ஒரத்தநாடு அருகிலுள்ள திருவோணத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கடலைப் பயிா்களை மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.
திருவோணம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் மானாவாரிப் பயிராக சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் கடலை பயிரிடப்பட்டிருந்தது. அண்மையில் பெய்த மழையின் காரணமாக இந்த பயிா்கள் சேதமடைந்தன.
சிவவிடுதி, காடுவெட்டிவிடுதி, தோப்புவிடுதி கிராமங்களில் சேதமடைந்த கடலைப் பயிா்களை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் கோவிந்த ராவ், சேதத்தின் விவரங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தாா்.
காவாளிப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கிலிருந்து நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றும் பணி, சம்பா பருவத்துக்கு வரப்பெற்றுள்ள 1.92 லட்சம் சாக்குகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.
தொடா்ந்து கொல்லாங்குளம் ஏரியை பாா்வையிட்ட ஆட்சியரிடம், இதற்கான வடிகால், பாசனவசதியை ஏற்படுத்தித் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
ஆய்வின் போது வேளாண் இணை இயக்குநா் ஜஸ்டின், துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) கோமதி தங்கம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத் தர ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.