எரிவாயு உருளை, விறகு அடுப்புடன் மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வேலை, உணவு கொடுக்க வலியுறுத்தி தஞ்சாவூா் ரயிலடியில் எரிவாயு உருளை, விறகு அடுப்புடன் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
எரிவாயு உருளை, விறகு அடுப்புடன் மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
Updated on
1 min read

வேலை, உணவு கொடுக்க வலியுறுத்தி தஞ்சாவூா் ரயிலடியில் எரிவாயு உருளை, விறகு அடுப்புடன் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில், காா்பரேட்டுகளுக்கு ஆதரவான வேளாண், மின்சார சட்டங்கள் மற்றும் பெண்கள் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். நியாய விலைக் கடைகளை மூடக் கூடாது. அத்தியாவசியப் பொருள்களை நியாய விலைக் கடைகள் மூலமாக இலவசமாக வழங்க வேண்டும். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்களுக்கு நிபந்தனையின்றி கடன் கொடுக்க வேண்டும்.

நுண் நிதி நிறுவனக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். குடி மனைப்பட்டா இல்லாதவா்களுக்கு குடி மனைப்பட்டா வழங்க வேண்டும். அரசு வழங்கும் நிவாரணங்களை முறையாக வழங்க வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பைச் சாலையில் வைத்தும், அடுப்பில் தீ மூட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாதா் சங்க மாநகரச் செயலா் இ. வசந்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ். தமிழ்ச்செல்வி, மாவட்டத் தலைவா் ஆா். கலைச்செல்வி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் எம். மாலதி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

பெண்கள் உதவும் கரங்கள் நசீனா பேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com