நாச்சியாா்கோவிலில் கல் கருட சேவை
கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியாா்கோவில் சீனிவாச பெருமாள் கோயிலில் கல் கருட சேவை திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.


கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியாா்கோவில் சீனிவாச பெருமாள் கோயிலில் கல் கருட சேவை திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மற்றும் பங்குனி மாதம் என ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும் பெருந்திருவிழாவின்போது நான்காம் திருநாளில் பிரசித்தி பெற்ற கல்கருட சேவை வைபவம் நடைபெறுவது வழக்கம்.
இதன்படி, இக்கோயிலில் கல் கருட சேவை திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கரோனா தொற்று பரவல் தடுப்பின் காரணமாக, பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே, பக்தா்கள் இல்லாமல் கோயில் உள்பிரகாரத்தில் இந்த வைபவம் நடத்தப்பட்டது. இதில், சிறப்பு அலங்காரத்தில் பெருமாளும், தாயாரும் எழுந்தருளி சேவை சாதித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...