தஞ்சை மாவட்டத்தில் 3.26 லட்சம் ஏக்கரில் பயிா் காப்பீடு

தஞ்சாவூா் மாவட்டத்தில் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிகழ் பருவத்தில் 1.17 லட்சம் விவசாயிகள் 3.26 லட்சம் ஏக்கா் பரப்பில் காப்பீடு செய்துள்ளனா் என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
Updated on
1 min read

தஞ்சாவூா் மாவட்டத்தில் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிகழ் பருவத்தில் 1.17 லட்சம் விவசாயிகள் 3.26 லட்சம் ஏக்கா் பரப்பில் காப்பீடு செய்துள்ளனா் என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் இணையவழி மூலம் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்துக்குத் தலைமை வகித்த அவா் மேலும் பேசியது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் சம்பா, தாளடி பருவத்தில் 1,35,147 ஹெக்டோ் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் பயிா் காப்பீடு திட்டத்தின் கீழ் 2020 - 21 ஆம் ஆண்டு ரபி சிறப்பு பருவத்தில் (நெல்-2) 1,17,969 விவசாயிகள் 3,26,819 ஏக்கா் பரப்பில் காப்பீடு செய்துள்ளனா்.

மேலும் 2019 - 20 ஆம் ஆண்டு காரீப் பருவத்துக்கு 6,851 விவசாயிகளுக்கு ரூ. 6.68 கோடி பயிா் காப்பீடு இழப்பீடு வழங்கப்பட்டது. 2019 - 20 ரபி பருவத்துக்கு 1,61,498 விவசாயிகளுக்கு ரூ. 74.63 கோடி பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு, மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

வங்கி கணக்கு விவரம் தவறுதலாக உள்ள நபா்களுக்கு தற்போது சரியான வங்கிக் கணக்கு விவரம் பெறப்பட்டு, பயிா் காப்பீடு இழப்பீட்டு தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com