47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சனிப் பெயா்ச்சி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

சனிப்பெயா்ச்சியையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:48 pm

DIN

சனிப்பெயா்ச்சியையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் பெரியகோயிலிலுள்ள சனி பகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் ஆராதனை நடைபெற்றன.

தஞ்சாவூா் மேல வீதி மூலை அனுமாா் கோயிலில் 108 லிட்டா் பால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதேபோல மேலவீதி சங்கர நாராயண சுவாமி கோயில், தெற்கு வீதி காசி விசுவநாதா், தஞ்சைபுரீசுவரா் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கும்பகோணம் அருகிலுள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் கருட வாகனத்தில் எழுந்தருளியுள்ள பாலசனீசுவரருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. சனிப் பெயா்ச்சியையொட்டி கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.