மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நிதி அமைச்சரின் அறிவிப்புகள் ஏமாற்றம் அளிப்பதால் மே 19ஆம் தேதி ஆர்ப்பாட்டம்: முத்தரசன் அறிவிப்பு

மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகள் ஏமாற்றம் அளிப்பதால், தமிழ்நாட்டில் 3,000 இடங்களில் மே 19 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன்.

News image
Updated On :16 மே 2020, 11:56 am

DIN

மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகள் ஏமாற்றம் அளிப்பதால், தமிழ்நாட்டில் 3,000 இடங்களில் மே 19 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன்.

கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் தெரிவித்தது: கரோனா பாதிப்பு காரணமாக  நாடு முழுவதும் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், பொருளாதார நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடி ரூ. 20 லட்சம் கோடிக்கு அறிவித்தார். இதைத்தொடர்ந்து நிதி அமைச்சர் 3 நாட்களாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்த அறிவிப்புகள் ஏமாற்றம் அளிக்கும் விதமாக வெற்று அறிவிப்புகளாக இருக்கின்றன.

 மாநிலங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும்.  

தொழிலாளர்களின் இழப்பை ஈடு செய்ய நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் பாதிப்புக்கு நேரடி இழப்பீடு கொடுக்க வேண்டும். கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டும்.  சிறு குறு தொழில்களைப் காப்பாற்றப் பொருளாதார ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 ஆனால், இவையெல்லாம் நிறைவேற்றப்படாத காரணத்தால், நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே 19 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 3,000-க்கும் அதிகமான இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. 

கட்சி அலுவலகங்கள், தோழர்களின் வீடுகள் உள்ளிட்டவற்றின் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழ்நாட்டில் ஏற்கெனவே கரோனா தொற்றால் 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் இன்னும் 10,000 பேர் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றார் முத்தரசன்.

அப்போது, கட்சியின் மாவட்டச் செயலர் மு.அ. பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.