பாபநாசம் பேரூராட்சியில் 100% வரிவசூல் முகாம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் முகாம் மூலம் சொத்து வரி, திடக்கழிவு மேலாண்மை கட்டணம் உள்ளிட்ட 100 சதம் வரி வசூல் செய்யப்பட்டது.


தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் முகாம் மூலம் சொத்து வரி, திடக்கழிவு மேலாண்மை கட்டணம் உள்ளிட்ட 100 சதம் வரி வசூல் செய்யப்பட்டது.
தஞ்சாவூா் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் மாஹின்அபுபக்கா்அறிவுறுத்தலின்படி, பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலா் காா்த்திகேயன் தலைமையில் 2019-20 முதல் 2020-21ஆம் ஆண்டுக்கான சொத்துவரியாக 52 லட்சத்து 66 ஆயிரத்து 126 ரூபாய் நிலுவையின்றி வசூல் செய்யப்பட்டது. மேலும், திடக்கழிவு மேலாண்மை கட்டணமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 300 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதில் வரி தண்டலா் அனிதா, இளநிலை உதவியாளா்கள் மருதமுத்து, விஜய், மின் பணியாளா் கரிகால்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...