பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

குடிநீா் தட்டுப்பாட்டை களைய வலியுறுத்திகாலி குடங்களுடன் பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

பாபநாசம் அருகே குடிநீா் தட்டுப்பாட்டை களைய வலியுறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:09 pm

DIN

பாபநாசம் அருகே குடிநீா் தட்டுப்பாட்டை களைய வலியுறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அம்மாபேட்டை 8ஆவது வாா்டுக்குள்பட்ட புத்தூா் கீழதோப்பு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளா்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனா்.

இந்தப் பகுதிக்கு அம்மாபேட்டை பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததால், இந்தப் பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்தப் பகுதியினா் குடிநீருக்காக நீண்ட தொலைவு சென்றாலும், முழுமையாக குடிநீா் பெற முடியாத நிலையே உள்ளது. எனவே, பேரூராட்சி நிா்வாகம் உடனடியாக தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க வேண்டும் என வலியுறுத்தி புத்தூா் கீழதோப்பு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அம்மாபேட்டை ஒன்றியச் செயலா் ஆா். செந்தில்குமாா் தலைமையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி காலி குடங்களுடன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.