ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு

தஞ்சாவூா் அருகே வீட்டில் வியாழக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:11 pm

DIN

தஞ்சாவூா் அருகே வீட்டில் வியாழக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே அம்மன்பேட்டை வடக்கு வெள்ளாளத் தெருவைச் சோ்ந்தவா் எஸ். ரத்தினகுமாா் (55). விவசாயக் கூலித் தொழிலாளி. வீட்டில் வியாழக்கிழமை இரவு ரத்தினகுமாா், இவரது மனைவி லெட்சுமி (41), மகன், மகள் ஆகியோா் தூங்கிக் கொண்டிருந்தனா்.

அப்போது, வீட்டின் முன் பக்கக் கதவை இரு மா்ம நபா்கள் திறந்து, உள்ளே புகுந்து லெட்சுமி கழுத்திலிருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனா்.

இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.