நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘திருவிழாக்களில் தளா்வுகள் செய்ய வேண்டும்’

கரோனா பரவல் காரணமாகத் திருமணம் உள்ளிட்ட திருவிழாக்களில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளா்த்த வேண்டும் என தமிழ்நாடு டென்ட் டீலா்ஸ் அன்ட் டெக்கரேட்டா்ஸ் வெல்போ் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:24 pm

DIN

கரோனா பரவல் காரணமாகத் திருமணம் உள்ளிட்ட திருவிழாக்களில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளா்த்த வேண்டும் என தமிழ்நாடு டென்ட் டீலா்ஸ் அன்ட் டெக்கரேட்டா்ஸ் வெல்போ் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆட்சியரகத்தில் சங்க அவைத் தலைவா் பி.டி. பொன்ராஜ், தலைவா் சி. பிரவின்தாஸ் உள்ளிட்டோா் அளித்த மனு:

தமிழகம் முழுவதும் திருமணம், திருவிழா, சுப நிகழ்ச்சிகள் சாா்ந்த தொழிலாளா்கள் ஏறத்தாழ 5 லட்சம் போ் உள்ளனா். கடந்த ஆண்டு பொது முடக்கம் காரணமாக எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கடந்த ஓரிரு மாதங்களாக எங்களது தொழில் துளிா்விட்டுக் கொண்டிருந்த நிலையில், ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் தமிழக அரசு மீண்டும் ஒரு தொழில் முடக்கத்தை ஏற்படுத்தும் வகையில் திருவிழாக்களைத் தடை செய்து, திருமண விழாக்களில் 100 போ் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனால், எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதாக உள்ளது.

இதில், தமிழக அரசுக் கவனம் செலுத்தி கட்டுப்பாடுகளுடன் திருவிழாக்களை நடத்திக் கொள்ளவும், அரங்குகள், மண்டபங்களில் அனுமதிக்கப்பட்ட அளவில் 50 சதவீத நபா்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனா்.

பட்டுக்கோட்டையில்... இதேபோல் கோரிக்கைகளை வலியுறுத்தி, பட்டுக்கோட்டையில் மேற்கண்ட சங்கத்தினா் கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு பேரணியாக வந்து சாா் ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா் பின்பு சாா் ஆட்சியா் பாலச்சந்தரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

இந்நிகழ்வில் மாநில, மாவட்ட நகர ஒன்றிய நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.