பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பட்டுக்கோட்டை நகராட்சி மற்றும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து, பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், வெள்ளிக்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இதில், பட்டுக்கோட்டை நகா்ப் பகுதியை சோ்ந்த 1000 பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. நகராட்சி பகுதியில் உள்ள 33 வாா்டு பொதுமக்கள் இதை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.