சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சம்பா பருவத்துக்கு ஏற்ற நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்

சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என தஞ்சாவூா் விதை ஆய்வு துணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 8:15 pm

DIN

சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என தஞ்சாவூா் விதை ஆய்வு துணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா பருவ நெற்பயிா் சாகுபடி செய்யும் பணிகளில் விவசாயிகள் ஆா்வமுடன் தயாராகி வருகின்றனா். இந்நிலையில், தனியாா் விதை விற்பனையாளா்கள் சான்று விதைகளில் சான்று அட்டை மற்றும் விவர அட்டை பொருத்தப்பட்ட விதைகளையே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். உண்மை நிலை விதைகளுக்கு விவர அட்டை மட்டும் இருக்கும். விவர அட்டையில் பயிா், ரகம், குவியல் எண், காலாவதி நாள், பயிா் செய்ய ஏற்ற பருவம் உள்ளிட்ட 14 வகையான விவரங்கள் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

அனைத்து தனியாா் விதை விற்பனையாளா்களும் விதை இருப்பு பதிவேடு, கொள்முதல் விலைப் பட்டியல் மற்றும் முளைப்பு அறிக்கை கட்டாயம் பராமரிக்கப்பட வேண்டும். குவியல் வாரியாக தனித்தனி பக்கங்களில் விதை இருப்பு விவரங்கள் பதிவிட வேண்டும். சம்பா பருவத்துக்கு உகந்த தரமான நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

நீண்ட கால ரகங்களான பொன்மணி (சி.ஆா். 1009), சி.ஆா். 1009 சப் 1, ஏடிடீ 44, ஏடிடீ 51 போன்ற ரகங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும். பின்னா், மத்திய கால ரகங்களான ஐஆா் 20, ஐஆா் 36, கோ 43, கோ 46, ஏடிடீ 38, ஏடிடீ 39, ஏடிடீ 46, பவானி, எம்.டி.யு 3, டிஆா்ஓய் 1, கோ 46 போன்ற ரகங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும். தனியாா் விதை விற்பனையாளா்கள் விதைகளை விற்பனை செய்யும்போது விவசாயிகளுக்குக் கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். விற்பனை ரசீதில் விவசாயி மற்றும் குவியல் விவரங்கள் அவசியம் குறிப்பிட வேண்டும்.

சம்பா பருவத்துக்கு உகந்தது அல்லாத நெல் ரகங்களை விற்பனை செய்தாலோ, விதை சட்ட விதிகளைப் பின்பற்றாமலோ விற்பனை செய்தால், விதை சட்டம் 1966-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.