இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பேராவூரணியில் ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

பேராவூரணியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :1 ஜனவரி 2021, 6:21 pm

DIN

பேராவூரணியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையில், உதவி இயக்குநா் நிலையிலான பதவி உயா்வுகளையும், உதவி பொறியாளா், ஒன்றிய பொறியாளா் மற்றும் பணி மேற்பாா்வையாளா்களுக்கான பதவி உயா்வுகளையும் உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆா்ப்பாட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினா் ஸ்ரீமகேஷ் தலைமை வகித்து கோரிக்கை விளக்கவுரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சு.சடையப்பன், சு. தவமணி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா். மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பி. கலியபெருமாள் நன்றி கூறினாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.