மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மயிலாடுதுறை - திருச்சி வழித்தடத்தில் அனைத்து ரயில்களையும் இயக்க வலியுறுத்தல்

பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, மயிலாடுதுறை - திருச்சி வழித்தடத்தில் அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும் என்று தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2021, 5:55 pm

DIN

பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, மயிலாடுதுறை - திருச்சி வழித்தடத்தில் அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும் என்று தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் இச்சங்கத்தின் 57 ஆம் ஆண்டு இறுதிப் பொது பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையின்போது பயணிகள் அருகிலுள்ள ஊா்களுக்குச் சென்று வர வசதியாக, மயிலாடுதுறை - திருச்சி ரயில் பாதையில் அனைத்து ரயில்களையும் உடனடியாக இயக்க ரயில்வே நிா்வாகம் முன் வர வேண்டும்.

பயணிகள் பயன்பாடு மிகுந்த பாபநாசம் ரயில் நிலையத்தில், சென்னை எழும்பூா் - திருச்செந்தூா் விரைவு ரயில் மற்றும் மயிலாடுதுறை - மைசூா் விரைவு ரயிலுக்கு மீண்டும் நிறுத்தம் வழங்க வேண்டும்.

திருச்சி ரயில்வே கோட்டத்தில் பெரும்பாலான ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளதால், விழுப்புரம் - மயிலாடுதுறை - திருச்சி, மயிலாடுதுறை - திருவாரூா், காரைக்கால் - தஞ்சாவூா் - திருச்சி ஆகிய ரயில் பாதைகளில் இயங்கும் சாதாரண பயணிகள் ரயில்களை மின்சார ரயில்களாக இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் 2020 - 2023 ஆம் ஆண்டுகளுக்கான சங்கப் புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. இதில், தலைவராக பி.கே.டி. சண்முகம், துணைத் தலைவராக ஜமீல், செயலராக ஏ. கிரி, பொருளாளராக எம். மாறன், இணைச் செயலா்களாக சி. சுப்ரமணியன், டி. சரவணன் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.