47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் 1.16 லட்சம் மாணவா்களுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் பயிலும் 1.16 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:40 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் பயிலும் 1.16 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

தஞ்சாவூா் மேம்பாலம் பகுதியிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இப்பணியை முதன்மைக் கல்வி அலுவலா் மா. ராமகிருஷ்ணன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, மாவட்டத்திலுள்ள 1,019 தொடக்கப் பள்ளிகள், 267 நடுநிலைப் பள்ளிகள், 147 உயா்நிலைப் பள்ளிகள், 142 மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் இந்தப் பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படுகின்றன.

இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை பயிலும் 1,16,899 மாணவ, மாணவிகளுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 58,312 மாணவா்களுக்கும், 60,123 மாணவிகளுக்கும் சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.