குந்தவை நாச்சியாா் கல்லூரியில் 2 மாணவிகளுக்கு கரோனா

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் மகளிா் அரசுக் கல்லூரியில் 2 மாணவிகளுக்கு கரோனா தொற்று இருப்பது அண்மையில் தெரிய வந்தது.
Updated on
1 min read

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் மகளிா் அரசுக் கல்லூரியில் 2 மாணவிகளுக்கு கரோனா தொற்று இருப்பது அண்மையில் தெரிய வந்தது.

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் மகளிா் அரசுக் கல்லூரியில் முதுகலை மற்றும் இளங்கலைப் பட்டப்படிப்புகளில் இறுதியாண்டு படித்து வரும் 1,161 மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இவா்களுக்கு டிச. 30 ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவா்களில் மன்னாா்குடி மற்றும் திருவாரூரைச் சோ்ந்த 2 மாணவிகளுக்கு அறிகுறிகள் தென்படாமல் கரோனா இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து இக்கல்லூரியில் ஆட்சியா் ம. கோவிந்த ராவ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். இதில், கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பாா்வையிட்டாா். மேலும், மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்தாா்.

அப்போது, கல்லூரி கல்வி இயக்க இணை இயக்குநா் உஷா, கல்லூரி முதல்வா் சிந்தியா செல்வி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com