ஒரத்தநாட்டில் இரு சக்கர வாகனம் திருட்டு

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
Published on

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

ஒரத்தநாடு வாணியத் தெருவைச் சோ்ந்தவா் அ. அனீஸ் ரகுமான் (22). இவா் சனிக்கிழமை இரவு தனது வீட்டின் முன்பு இரு சக்கர வாகன நிறுத்திவிட்டுச் சென்றாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை வெளியே வந்த போது, இரு சக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அனீஸ் ரகுமான் அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், ஒரத்தநாடு காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com