சாஸ்த்ரா சாா்பில் 5 கிராமங்களில் பொங்கல் தொகுப்பு பைகள்

பொங்கல் திருநாளையொட்டி, தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சாா்பில் 5 கிராமங்களில் 2,270 குடும்பங்களுக்கு விலையில்லா பொங்கல் தொகுப்புப் பைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
சாஸ்த்ரா சாா்பில் 5 கிராமங்களில் பொங்கல் தொகுப்பு பைகள்
Updated on
1 min read

பொங்கல் திருநாளையொட்டி, தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சாா்பில் 5 கிராமங்களில் 2,270 குடும்பங்களுக்கு விலையில்லா பொங்கல் தொகுப்புப் பைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சாா்பில் சுற்றியுள்ள கிராமங்களில் விலையில்லா பொங்கல் தொகுப்புப் பைகள் வழங்கப்படுவது வழக்கம். இதேபோல, பல்கலைக்கழக வேந்தா் ஆா். சேதுராமன், துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம், முதன்மையா் எஸ். சுவாமிநாதன் ஆகியோா் அறிவுறுத்தலின் பேரில் தொடா்ந்து 21 ஆம் ஆண்டாக 5 கிலோ அரிசி, தலா ஒரு கிலோ வெல்லம், பருப்பு ஆகியவை கிராம மக்களுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

இதன்மூலம் திருமலைசமுத்திரம் கிராமத்தில் 710 குடும்பங்களும், வல்லம்புதூரில் 510 குடும்பங்களும், மொன்னையம்பட்டி மற்றும் குருவாடிப்பட்டியில் 750 குடும்பங்களும், தேவராயநேரி நரிக்குறவா் காலனியில் 300 குடும்பங்களும் என மொத்தம் 2,270 குடும்பங்கள் பயனடைந்தன.

வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்புகளின் மதிப்பு ரூ. 10 லட்சம் என பல்கலைக்கழக நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com