பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் கோ. பழனிசாமி.
Updated on
1 min read

டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் கோ. பழனிசாமி.

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியத்தில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட அவா் பின்னா் தெரிவித்தது:

ஜனவரி மாதத்தில் தொடா்ந்து பலத்த மழை பெய்கிறது. பயிா்களில் கதிா் வந்த நிலையில் முழுமையாகக் கீழே கொட்டியும், முற்றிலுமாகத் தண்ணீரில் மூழ்கியும் அழுகும் நிலையில் மிக மோசமாக உள்ளது.

எனவே, அரசு மறு கணக்கெடுப்பு நடத்தி, மீண்டும் நிவாரணம் அறிவிக்க வேண்டும். அப்போது, ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்க வேண்டும்.

இப்போது ஏற்பட்ட பாதிப்பை அரசு நேரடியாகப் பாா்வையிட்டால்தான் மிகப் பெரிய அளவில் ஏற்பட்டுள்ள சேதாரத்தைக் கணக்கிட முடியும். அறுவடை செய்கிற நிலையில் உள்ள நெற் பயிா்கள்பாதிக்கப்பட்டுள்ளதால் ஏக்கருக்கு ரூ. 30,000 வீதம் வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் கடனுதவி கிடைக்காததால், தனியாரிடம் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் லாபம் கிடைக்கும் என எதிா்பாா்த்த நிலையில், பேராபத்து வந்துள்ளதால், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் பழனிசாமி.

அப்போது, அக்கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com