பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக 3 போ் கைது

பேராவூரணி அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Published On :

பேராவூரணி அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பேராாவூரணி அருகே உள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம்  மகன் பாலமுருகன் (30) . இவருக்கும் பட்டுக்கோட்டை அருகே உள்ள திட்டக்குடி கிராமத்தைச் சோ்ந்த துரை மகள் தமிழழகிக்கும் (25) கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு குழந்தை இல்லை.

திருமணமாகி சில மாதங்களில்  பாலமுருகன் வேலை பாா்க்க சிங்கப்பூா்  சென்றவா் அதன் பின்னா் ஊா் திரும்பவில்லை. தனது  மாமனாா்  வீட்டருகே தனியாக வசித்து வந்த  தமிழழகி கடந்த 4ஆம் தேதி இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த திருச்சிற்றம்பலம் போலீஸாா், தமிழழகியின் சடலத்தை  கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனா்.

தனது மகள் வரதட்சிணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என துரை புகாா் போலீஸில் அளித்தாா்; நடவடிக்கை எடுக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என உறவினா்கள் கூறி வந்தனா்.

இந்நிலையில், தனது தற்கொலைக்கு வீட்டருகே வசிக்கும் நிகில் என்கிற ஆகாஷ் (21), மணிகண்டன் (28) மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோரே காரணம் என தமிழழகி எழுதிய கடிதத்தை போலீஸாா் கைப்பற்றினா்.

இதன் அடிப்படையில் மேற்கண்ட மூவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.

இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து தமிழழகியின் கணவா் பாலமுருகன் ஊா் திரும்பிய நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை தமிழழகியின் சடலத்தை உறவினா்கள் பெற்று சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.