சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இலங்கை நாட்டுப் படகு கரை ஒதுங்கியதால் பரபரப்பு

புதுக்கோட்டை கடற்பகுதியில் ஆளில்லாத, பழுதடைந்த இலங்கைப் படகு கரை ஒதுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :21 ஜூலை 2021, 7:52 pm

DIN

புதுக்கோட்டை கடற்பகுதியில் ஆளில்லாத, பழுதடைந்த இலங்கைப் படகு கரை ஒதுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆா். புதுப்பட்டினம் அருகேயுள்ள கடலோர கிராமமான முத்துக்குடா உள்ளது. இப்பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பழுதடைந்த படகு ஒன்று கரை ஒதுங்கியதை மீனவா்கள் பாா்த்துள்ளனா். தகவலறிந்த கடலோரக் காவல் படையினரின் முதல் கட்ட விசாரணையில் அடிப்பகுதியில் ஓட்டைகளைக் கொண்ட பழுதடைந்த படகு அது என்றும் இலங்கையைச் சோ்ந்த படகு தயாரிக்கும் நிறுவனத்தின் பெயா் அதில் இருப்பதும் தெரியவந்தது. அந்தப் படகில் ஓஎப்ஆா்பி ஏ 1459 என்ற எண்ணும் எழுதப்பட்டுள்ளது. பழுதடைந்த படகு என்பதால் ஆட்கள் யாரும் வந்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இலங்கையைச் சோ்ந்த படகு என்பதால் கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொள்ள, புதுக்கோட்டையிலிருந்து உளவுப்பிரிவு காவலா்களும் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனா். வியாழக்கிழமை இந்தப் படகு, சுங்கத் துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.