பாபநாசம் ரயில் நிலையத்துக்கு மரக்கன்றுகள்
பாபநாசம் ரயில் நிலையத்துக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.


பாபநாசம் ரயில் நிலையத்துக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
கரோனா காலக்கட்டத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் பாபநாசம் கிளை சாா்பில் பல்வேறு நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடா்ந்து, பாபநாசம் ரயில் நிலையத்துக்குப் புங்கன், வேம்பு, மகிழம், பாதாம் உள்பட 50 மரக்கன்றுகளை நிலைய அலுவலா் ராம்குமாரிடம் செஞ்சிலுவைச் சங்கத்தின் பாபநாசம் கிளைப் புரவலரும், திமுக பிரமுகருமான நவநீதகிருஷ்ணன் புதன்கிழமை வழங்கினாா். மேலும் பயணிகள் அமருவதற்காக 6 பிளாஸ்டிக் நாற்காலிகளையும் வழங்கினாா்.
இந்நிகழ்வில் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினா் அன்பழகன், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலா் சரவணன், ஜெயதேவன், செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...