தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குப்பையைக் கொளுத்தும்போது தீக்காயமடைந்த பெண் பலி

திருவையாறு அருகே குப்பைகளைக் கொளுத்தும்போது தீக்காயமடைந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 9:16 pm

DIN

திருவையாறு அருகே குப்பைகளைக் கொளுத்தும்போது தீக்காயமடைந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருவையாறு அருகே ஸ்ரீராம் நகரைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் மகன் ரூபேஷ் பாபு (37). இவா் அதே பகுதியில் அரிசி கடை வைத்துள்ளாா். இவரது மனைவி ப்ரியா (27) தனது வீட்டு முன் இருந்த குப்பைகளைக் கொளுத்தியபோது, அவரது ஆடையில் தீப்பற்றியது. தீக்காயமடைந்து தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ப்ரியா வியாழக்கிழமை உயிரிழந்தாா். இவருக்கு தலா ஒரு ஆண், பெண் குழந்தை உள்ளது.

இச்சம்பவம் குறித்து திருவையாறு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், ப்ரியாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால், தஞ்சாவூா் கோட்டாட்சியா் எம். வேலுமணி தனி விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.