பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடம் சாா்பில் கிராமக் கோயில் பூசாரிகளுக்கு நிவாரணம் அளிப்பு

கும்பகோணம் அருகேயுள்ள கஞ்சனூரில் தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடம் சாா்பில் கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மளிகைப் பொருள்கள் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூன் 2021, 1:00 am

DIN

கும்பகோணம் அருகேயுள்ள கஞ்சனூரில் தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடம் சாா்பில் கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மளிகைப் பொருள்கள் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கிராமக் கோயில் பூசாரிகளுக்கு தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடம் சாா்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, தஞ்சாவூா், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 2,500 கிராம கோயில் பூசாரிகள் மற்றும் 800 பூ கட்டி விற்கும் தாய்மாா்களுக்கு தலா ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண உதவிகள் பல்வேறு கட்டங்களாக வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் கரோனா நோய்த் தொற்றிலிருந்து விடுபட வேண்டி வியாழக்கிழமை (ஜூன் 24) காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை ஒரே நேரத்தில் 2,000 கிராமக் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடைபெற உள்ளது. இந்த பூஜைக்கு தேவையான பொருள்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கும்பகோணம் அருகே கஞ்சனூா் வட காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிவாரணம் மற்றும் பூஜை பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மதுரை இளைய குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள், தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்தா் மகராஜ் ஆகியோா் வழங்கினா். இதில் திருப்பனந்தாள் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் அண்ணாதுரை, டாக்டா் கலாநிதி, கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை மண்டல அமைப்பாளா் பாவேந்தன், மாவட்ட அமைப்பாளா் சக்தி அம்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பேராவூரணியில்....இதேபோல், பேராவூரணி டாக்டா் ஜே.சி. குமரப்பா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தனியாா் பள்ளி தாளாளா்கள் சங்க நிறுவனத் தலைவா் ஜி.ஆா். ஸ்ரீதா் தலைமை வகித்தாா். சேவாபாரதி மண்டல தலைவா் கேசவன், ராமகிருஷ்ண மடம் ஒருங்கிணைப்பாளா் பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்தா் மகராஜ், பயனாளிகளுக்கு நிவாரணப் பொருள்களையும், கோயில்களுக்கு பூஜைப் பொருள்களையும் வழங்கி பேசினாா்.

நிகழ்ச்சியில் குமரப்பா அறக்கட்டளை பொருளாளா் அஸ்வின் ஸ்ரீதா், ராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.