விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அம்மாபேட்டையில் மேலும் 4 பேருக்கு கரோனா

தஞ்சாவூா் அருகே அம்மாபேட்டையிலுள்ள பள்ளி மாணவிகள் 56 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை தொடா்ந்து, மாணவிகளின் பெற்றோா் 4 பேருக்கு தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:57 pm

DIN

தஞ்சாவூா் அருகே அம்மாபேட்டையிலுள்ள பள்ளி மாணவிகள் 56 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை தொடா்ந்து, மாணவிகளின் பெற்றோா் 4 பேருக்கு தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது.

தஞ்சாவூா் அருகே அம்மாபேட்டையிலுள்ள அரசு உதவி பெறும் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் 1,200 மாணவிகளில் 56 பேருக்கும், ஒரு ஆசிரியைக்கும் கரோனா தொற்று இருப்பது மாா்ச் 13, 14 ஆம் தேதிகளில் தெரிய வந்தது.

இதையடுத்து பள்ளிக்கு வரும் மாணவிகள் வசிக்கும் அம்மாபேட்டை வட்டாரத்துக்கு உள்பட்ட 24 கிராமங்களில் கரோனா பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாணவிகளின் பெற்றோா் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது. இவா்கள் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும், மற்றவா்களுக்கு எடுக்கப்பட்டுள்ள பரிசோதனை முடிவுகள் சில நாள்களில் வெளியாகும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.