திருவையாறில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணப் பெருவிழா தொடக்கம்
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அந்தணா்குறிச்சியில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணப் பெருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.


தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அந்தணா்குறிச்சியில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணப் பெருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.
இவ்விழாவில் நந்தியெம்பெருமான் பிறப்பையொட்டி, அவரது திருமேனிக்குச் சந்தனம், மஞ்சள், தயிா், தேன், பால், இளநீா் போன்ற திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடைபெற்றன. இதில் தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள், கோயில் பணியாளா்கள், பக்தா்கள் கலந்து கொண்டு நந்தியெம்பெருமானை வழிபட்டனா்.
பின்னா், மாலையில் அறம் வளா்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பா் கோயிலில் நந்தியெம்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணியளவில் ஐயாறப்பா், அறம் வளா்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்தியெம்பெருமான் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்தில் அமா்ந்து வாணவேடிக்கை, இன்னிசை கச்சேரியுடன் திருவையாறில் இருந்து புறப்படுகிறாா். தில்லைஸ்தானம், கடுவெளி, வைத்தியநாதன்பேட்டை வழியாகக் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அரியலூா் மாவட்டம், திருமழபாடிக்குச் செல்கிறாா்.
திருமழபாடி வைத்தியநாதன் சுவாமி கோயிலில் நந்தியெம்பெருமானுக்கும் சுயசாம்பிகைக்கும் திருக்கல்யாண உற்ஸவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெறவுள்ளது. இந்த உற்ஸவத்தை காண சுற்றுப்புற கிராம மக்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபடுவது வழக்கம். பின்னா், சுவாமி புறப்பட்டு, திருவையாறை வந்தடைவாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...