தஞ்சாவூா் அருகிலுள்ள தனியாா் வேளாண் கல்லூரியில் 24 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.
மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 16 பள்ளிகள், 4 கல்லூரிகளில் பயிலும் 227 மாணவ, மாணவிகள் உள்பட மொத்தம் 243 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் 120-க்கும் அதிகமானோா் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினா்.
இந்நிலையில் தஞ்சாவூா் அருகிலுள்ள தனியாா் வேளாண் கல்லூரியில் இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு படிக்கும் 22 மாணவிகள், 2 மாணவா்கள் என 24 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.
இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 251 ஆக உயா்ந்துள்ளது. மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கல்லூரிகளின் எண்ணிக்கையும் 5 ஆக அதிகரித்துள்ளது.