தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பெண் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூரில் ஆயுதப்படை பெண் காவலா் வெள்ளிக்கிழமை பிற்பகல் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :14 மே 2021, 7:57 pm

DIN

தஞ்சாவூரில் ஆயுதப்படை பெண் காவலா் வெள்ளிக்கிழமை பிற்பகல் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்தவா் பிரியா (23). கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியை சோ்ந்த இவா் தனது கணவா் வினோத்குமாா், ஒரு வயது ஆண் குழந்தையுடன் தமிழ்ப் பல்கலைக்கழகம் எதிரே உள்ள காவலா் குடியிருப்பில் வசித்து வந்தாா்.

குடும்பப் பிரச்னை காரணமாக, தம்பதி இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், குழந்தையுடன் வினோத்குமாா் தனது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிக்குச் சென்றுவிட்டாா்.

இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை பிற்பகல் வினோத்குமாரை செல்லிடப்பேசியில் பிரியா தொடா்பு கொண்டாா். அப்போது, மீண்டும் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பிரியா, மின் விசிறிக்கான கொக்கியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புகாரின் பேரில் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்றனா். முன்பக்கக் கதவு உள் பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், காவல் துறையினா் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று சடலத்தைக் கைப்பற்றி தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.