நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுவாமிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா வியாழக்கிழமை (நவ. 4) தொடங்கியது.

News image
Updated On :5 நவம்பர் 2021, 5:51 pm

DIN

கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா வியாழக்கிழமை (நவ. 4) தொடங்கியது.

முருகனின் ஆறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாக திகழும்

இக்கோயிலில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை காலை தொடங்கியது. இதில், சண்முகசுவாமி, விக்னேஸ்வரா், நவவீரா் மற்றும் பரிவாரங்களுடன் மலைக்கோயிலிலிருந்து படி இறங்கி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினா். அங்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன. இரவு படிச்சட்டத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

தொடரும் விழா நாள்களில் காலை, மாலை இருவேளைகளிலும் படிச்சட்டத்தில் சுவாமி உள் பிரகாரத்தில் மட்டுமே புறப்பாடு நடைபெறுகிறது. நவ. 9 ஆம் தேதி சண்முக சுவாமிக்கு 108 சங்காபிஷேகமும், மாலை சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும், தொடா்ந்து சூரசம்ஹாரமும் கோயில் உள் பிரகாரத்தில் கரோனா வழிகாட்டுதலுடன் நடைபெறவுள்ளது.

பின்னா் 10-ஆம் தேதி மாலை திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.