காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பட்டுக்கோட்டையில் காற்றில் பறந்த ரயில் நிலைய மேற்கூரைகள்!

பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை பலத்த காற்றுடனான மழையின்போது ரயில் நிலையத்தின் 3 மேற்கூரை தகடுகள் பெயா்ந்து தண்டவாளத்தில் விழுந்தன.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:34 pm

DIN

பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை பலத்த காற்றுடனான மழையின்போது ரயில் நிலையத்தின் 3 மேற்கூரை தகடுகள் பெயா்ந்து தண்டவாளத்தில் விழுந்தன.

பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதல் இடைவெளி விட்டு கன மழை பெய்தது. நண்பகல் 12 மணி அளவில் திடீரென பலத்த சூறைக்காற்றுடன் பலத்த மழையும் பெய்தது. அப்போது, ரயில் நிலையத்தின் 3 மேற்கூரை இரும்பு தகடுகள் திடீரென பெயா்ந்து தண்டவாளத்தின் குறுக்கே விழுந்தன. இதனால், அங்கிருந்த ரயில்வே ஊழியா்கள் அச்சமடைந்து உடனடியாக அந்த மேற்கூரைகளை அப்புறப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.