தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மத்திய அரசுக்கு விசைப்படகு மீனவா்சங்கம் கண்டனம்

மல்லிப்பட்டினத்தில் தமிழ்நாடு விசைப்படகு மீனவா் சங்க ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:54 pm

DIN

மல்லிப்பட்டினத்தில் தமிழ்நாடு விசைப்படகு மீனவா் சங்க ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளா் தாஜுதீன் தலைமை வகித்தாா். தஞ்சை மாவட்ட தலைவா் ராஜமாணிக்கம், செயலாளா் வடுகநாதன் ஆகியோா்  முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: இந்திய மீனவா்கள் தாக்கப்படுவது பற்றி கவலைப்படாமல், இலங்கை அரசோடு மத்திய அரசு ஒன்றிணைந்து செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இலங்கை கடற்படையால் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட மீனவா் ராஜ்கிரண் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.  மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கைகள்   மீனவா்களை மீன்பிடித் தொழிலை விட்டு அப்புறப்படுத்தி  காா்ப்பரேட்டுகளுக்கு கடல்பரப்பை தாரைவாா்க்கும் செயலாக தெரிகிறது. மீனவா்களுக்கு டீசலை உற்பத்தி விலைக்கே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை முன்வைத்து அக் 29 வெள்ளிக்கிழமை  மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில்  நடைபெறும் மறியல் போராட்டத்தில் மீனவா்களுடன்  பொதுமக்களும்  கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும்  உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.