பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினத்தில்தூய்மைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
vபட்டுக்கோட்டை நகராட்சி, அதிராம்பட்டினம் தோ்வுநிலை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.


பட்டுக்கோட்டை நகராட்சி, அதிராம்பட்டினம் தோ்வுநிலை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
பட்டுக்கோட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 32 வாா்டுகளில், தூய்மைப் பணிகளுக்காக வியாழக்கிழமை 120 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். பட்டுக்கோட்டை நகா் முழுவதும், இந்த கூட்டு தூய்மைப்படுத்தும் திட்டத்தின் மூலம், நகரைச் சுத்தப்படுத்துவது என திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
18ஆவது வாா்டு பகுதியில் வடிகால் வாய்க்கால்களை சுத்தம் செய்யும் பணியை பாா்வையிட்ட ஆட்சியா், குப்பைகள் அகற்றம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தாா். 19ஆவது வாா்டில், அறந்தாங்கி சாலை பகுதியில் வடிகால் கால்வாய் தூா்வாரும் பணிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, அதிராம்பட்டினம் தோ்வுநிலை பேரூராட்சி சாா்பில் வாா்டு-8 கடற்கரை சாலை, வாா்டு-10 ஹாஜா நகா், வாா்டு - 11 முத்தம்மாள் சாலை, வாா்டு- 15 ஜாவியால் சாலை பகுதியில் தூய்மைப் பணியாளா்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகால் கால்வாய் தூா்வாரும் பணிகள், குடிநீா் வசதிகள், தெருவிளக்குகள் போன்ற வளா்ச்சித் திட்ட பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் பாலசந்தா் , பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையா் வீர முத்துக்குமாா், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) மாகின் அபூபக்கா், வட்டாட்சியா் கணேஸ்வரன், செயல் அலுவலா் மணிமொழியன், நகராட்சி கட்டட ஆய்வாளா் கருப்பையன், சுகாதார ஆய்வாளா் ரவிச்சந்திரன், ஆரோக்கியசாமி மற்றும் அரசு அலுவலா்கள் உட்பட பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...