பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

100 சதம் கரோனா தடுப்பூசி செலுத்துதல் தொடா்பாக பேராவூரணி ஒன்றியத்தில் ஒருங்கிணைப்புக் கூட்டம்

பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் 100 சதம் கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடா்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் ஆவணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில்  வியாழக்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 11:01 pm

DIN

பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் 100 சதம் கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடா்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் ஆவணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில்  வியாழக்கிழமை நடைபெற்றது. 

தஞ்சாவூா் மாவட்டமானது, நூறு சதம்  தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டமாகவும், கரோனா தொற்று இல்லாத மாவட்டமாகவும் மாறுவதற்காக ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். இதன் ஒருபகுதியாக, வரும் ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தில் மாபெரும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளாா்.

இதையொட்டி ஆவணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், தஞ்சாவூா் மாவட்ட கூடுதல் ஆட்சியா் மற்றும் திட்ட இயக்குநா் ஸ்ரீகாந்த் தலைமை வகித்து  பேசுகையில், அனைவரும் தவறாமல் கரோனா தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்துவதில், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் முன்மாதிரி ஒன்றியமாக விளங்க வேண்டும்.

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நாளில்

உள்ளாட்சி பிரதிநிதிகள்  தோ்தல் பணியாற்றுவதுபோல் செயல்பட்டால், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த முடியும். அவ்வாறு 100 சதவீதம் தடுப்பு ஊசி இலக்கை நிறைவு செய்த ஊராட்சித் தலைவா்கள் கெளரவிக்கப்படுவாா்கள். இப்பணியில் அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் ஒன்றியக் குழு தலைவா் சசிகலா ரவிசங்கா்,  வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தவமணி, குமாரவடிவேல்,  வட்டார மருத்துவ அலுவலா் செளந்தரராஜன் மற்றும்  மருத்துவ அலுவலா்கள்,  ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சி செயலாளா்கள்,  வட்டார ஒருங்கிணைப்பாளா்கள்,  ஒன்றிய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

நிறைவாக துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீ. மகேஷ் நன்றி கூறினாாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.