‘வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட சாமி சிலைகளை மீட்க நடவடிக்கை’
வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட தமிழ்நாட்டு சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக் காவல் தலைவா் ஆா். தினகரன்.


வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட தமிழ்நாட்டு சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக் காவல் தலைவா் ஆா். தினகரன்.
கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் வளாகத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தை வியாழக்கிழமை பாா்வையிட்ட அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்புக் காவல் பிரிவில் பதிவு செய்யப்பட்ட, பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய சாமி சிலைகள் கும்பகோணத்திலுள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
பல வழக்குகளில் சிலைகள் எந்தக் கோயிலுக்குச் சொந்தமானது என்பது தெரியாமல் உள்ளது. அது தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதேபோல, பந்தநல்லூரிலுள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகளும் ஆய்வு செய்யப்பட்டன.
மேலும், தமிழகத்தில் மற்ற சிலை கடத்தல் தொடா்பான வழக்குகளில் உள்ள சிலைகளும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். தில்லி மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன் களவாடப்பட்டு வெளிநாடுகளில் உள்ள மற்ற சாமி சிலைகளை மீட்கும் முயற்சியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறோம் என்றாா் காவல் தலைவா் தினகரன்.
முன்னதாக, கும்பகோணம் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு கொண்டு வரப்பட்ட ஸ்ரீபுரந்தான் கோயில் நடராஜா் சிலை, பழநி முருகன் கோயிலின் உற்ஸவா் சிலை உள்ளிட்டவற்றை காவல் தலைவா் ஆய்வு செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...