ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உயிரிழப்பை வைத்து அரசியல் செய்யக்கூடாது: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

உயிரிழப்பை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

News image
களிமேடு கிராமத்தில் மின் விபத்துக்குள்ளான தேரை பார்வையிடுகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
Updated On :1 பிப்ரவரி 2024, 9:05 am

DIN

தஞ்சாவூர்: உயிரிழப்பை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர் மின் விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு புதன்கிழமை ஆறுதல் தெரிவித்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

இந்த சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்தது. தமிழக முதல்வர்  காலை 5 மணிக்கெல்லாம் எங்களையும், அதிகாரிகளையும் அனுப்பி நிகழ்விடத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். அவரது அணுகுமுறை எந்த அளவுக்குச் சிறப்பான முறையில் இருக்கிறது என்பதை பார்க்கலாம். அதிகாலை 3 மணிக்கு சம்பவம் நிகழ்ந்தாலும் உடனடியாக பொறுப்பு அமைச்சரையும் அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு பேசி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் கேள்விப்பட்டவுடன் தமிழக முதல்வர் மனது தாங்காமல் எங்களை முன்னே செல்லுமாறு கூறிவிட்டு அவரும் வந்து கொண்டிருக்கிறார். நடக்கக்கூடாத சம்பவங்கள் நடந்து விட்டது. எங்களால் என்ன செய்ய முடியுமோ தமிழக முதல்வர் செய்வார்.

அதிமுகவின் குற்றச்சாட்டுகளை நாங்கள் குற்றச்சாட்டுகளாகப் பார்க்கவில்லை. இறந்திருக்கிற சின்ன உயிராக இருந்தாலும், பெரிய உயிராக இருந்தாலும் மிகப்பெரிய இழப்பாக பார்க்கிறோம். இன்னும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என கருதுகிறோம். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்றார் அமைச்சர்.

அப்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை, டி.கே.ஜி. நீலமேகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.