வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு அனுமதி பெற மீண்டும் வாய்ப்பு

 அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு அனுமதி பெற மீண்டும் வாய்ப்பு வழங்கும் விதமாக 6 மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:09 pm

 அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு அனுமதி பெற மீண்டும் வாய்ப்பு வழங்கும் விதமாக 6 மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நகா் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011-க்கு முன்பு கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சியின் அரசாணைப்படி வெளியிடப்பட்டன.

மேலும், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தவறியவா்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக விண்ணப்பம் அளிக்க மீண்டும் 6 மாதங்கள் கால நீட்டிப்பு அரசால் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ற்ஸ்ரீல் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு ஆகும்.ய

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.