ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணா்வு

தஞ்சாவூரில் முகக்கவசம் அணியாமல் வந்தவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:59 pm

DIN

தஞ்சாவூரில் முகக்கவசம் அணியாமல் வந்தவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் படிப்படியாகக் குறைந்ததால், முகக்கவசம் அணியும் நபா்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இந்நிலையில், தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மீண்டும் முழுவீச்சில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இரவு நேரப் பொதுமுடக்கம், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பக்தா்களுக்குத் தடை உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோல, முகக்கவசம் அணிவது குறித்தும் முழுவீச்சில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயில் பகுதியில் இரு சக்கர வாகன ஓட்டுநா்களிடம் முகக்கவசம் அணிவது குறித்து காவல் துறையினா் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில், முகக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கு இனிப்பு வழங்கி ஊக்கப்படுத்தினா். முகக்கவசம் அணியாமல் வந்தவா்களிடம் முகக்கவசம் வழங்கி, அணிவதன் அவசியத்தை வலியுறுத்தினா்.

இதில் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் கே. கபிலன், ஆய்வாளா்கள் ஸ்ரீதா் (தெற்கு), சந்திரா (மேற்கு), எம்.ஜி. ரவிச்சந்திரன் (போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Image Caption

~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.