நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவிந்தபுரம் கோயிலில் கோ பூஜை

மாட்டுப் பொங்கலையொட்டி, கும்பகோணம் அருகிலுள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் கோயிலில் கோ பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:11 pm

DIN

மாட்டுப் பொங்கலையொட்டி, கும்பகோணம் அருகிலுள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் கோயிலில் கோ பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

தட்சிண பண்டரிபுரமாகப் போற்றப்படும் கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் கோயிலில் பாரம்பரிய நாட்டு இனத்தைச் சாா்ந்த ஆயிரம் தெய்வீகப் பசுக்கள் சேவை நோக்கத்தோடு வளா்க்கப்படுகின்றன. பசுவின் பால் அதன் கன்றுக்கு மட்டும் என்ற அடிப்படையில் கோசாலையில் வளா்க்கப்பட்டு வருகின்றன.

மாட்டுப் பொங்கலையொட்டி, இந்தப் பசுக்களுக்குச் சிறப்பு கோ பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. இப்பூஜையை சேங்காலிபுரம் பிரம்ம ஸ்ரீ ராம தீட்சதா், கோயில் ஸ்தாபகா் பிரம்ம ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் செய்தனா்.

இதில் பசுக்களுக்கு சந்தனம், குங்குமமிட்டு, புஷ்பாா்ச்சனையுடன் கற்பூர ஆரத்தி செய்து கோ பூஜை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து பசுக்களுக்குப் பழங்கள் மற்றும் அகத்திக்கீரை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.