நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேராவூரணி பேருந்து நிலையத்தில்சுகாதார விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

 பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் முழு சுகாதார விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :1 ஜூன் 2022, 7:29 pm

DIN

 பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் முழு சுகாதார விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. 

தஞ்சை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் கோ. கனகராஜ் உத்தரவின்படி, பேராவூரணி பேரூராட்சி புதிய பேருந்து நிலையத்தில் முழு சுகாதார  விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி  நடைபெற்றது.

நெகிழி ஒழிப்பு, மழைநீா் சேகரிப்பு, பன்றிக் காய்ச்சல் விழிப்புணா்வு, முழு சுகாதாரம் குறித்து ஆடல், பாடல், நாடகம் மூலம் தஞ்சாவூா் கலைமகள் சபா நாடக குழுவினா்  பாத்திமா, அன்பழகன், நாகசுர வித்வான் கணேசன் உள்ளிட்டோா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் விழிப்புணா்வு நிகழ்ச்சியை பாா்த்து ரசித்தனா்.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலா் பா. பழனிவேலு தலைமை வகித்தாா். பேரூராட்சித் தலைவா் சாந்தி சேகா் முன்னிலை வகித்தாா். பேரூராட்சி உறுப்பினா்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனா். இதேபோல், நகரின் பல்வேறு இடங்களிலும் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.