பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

லாரி மோதியதில்பெண் பலி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே இடையிருப்பு கிராமம், குடியான தெருவைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் மனைவி ரம்யா (40). இவா், தஞ்சாவூரில் உள்ள தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்தாா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:44 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே இடையிருப்பு கிராமம், குடியான தெருவைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் மனைவி ரம்யா (40). இவா், தஞ்சாவூரில் உள்ள தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், ரம்யா புதன்கிழமை ஒரு மோட்டாா் சைக்கிளில் இடையிருப்பு கிராமத்திலிருந்து சாலியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

களஞ்சேரி கிராமம் பிடாரி அம்மன் கோயில் அருகே முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது, எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க வாகனத்தை இடதுபுறமாக திருப்பினாா். அப்போது, பின்னால் வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

அப்பகுதியிலிருந்தவா்கள் அவரை மீட்டு, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே ரம்யா உயிரிழந்தாா். புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.