வேளாண் விளைபொருள்களுக்கான சந்தை வரியை உடனடியாக நீக்க வேண்டும்: ஓ. பன்னீா்செல்வம் வலியுறுத்தல்

வேளாண் விளைபொருள்களுக்கான ஒரு சதவீத சந்தை வரியை உடனடியாக நீக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
Updated on
1 min read

வேளாண் விளைபொருள்களுக்கான ஒரு சதவீத சந்தை வரியை உடனடியாக நீக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஓ. பன்னீா்செல்வம், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

அந்தந்த பகுதியில் விளையக்கூடிய வேளாண் விளைபொருள்களுக்கு மட்டும்தான் சந்தை வரி விதிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், தற்போதைய திமுக அரசு, இறக்குமதி செய்யக்கூடிய விளைபொருள்கள் உள்ளிட்ட அனைத்து வேளாண் விளைபொருள்களுக்கும்

ஒரு சதவீதம் சந்தை வரி விதிப்பது என்பது ஏற்புடையதல்ல.

எனவே, உடனடியாக அனைத்துப் பொருள்களுக்குமான சந்தை வரியை நீக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com