மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அக்னிபத் திட்டத்தைக் கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் அக்னிபத் திட்டத்தைக் கண்டித்து மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
தஞ்சாவூா் ரயிலடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
Updated On :27 ஜூன் 2022, 8:31 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் அக்னிபத் திட்டத்தைக் கண்டித்து மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் ரயிலடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இளைஞா்களின் வாழ்க்கையைச் சூறையாடும் அக்னிபத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். அரசு செலவில் ராணுவத்தை காவிமயமாக்கக் கூடாது என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் நாஞ்சி கி. வரதராஜன், மாநகர மாவட்டத் துணைத் தலைவா்கள் லட்சுமி நாராயணன், வயலூா் எஸ். ராமநாதன், பொருளாளா் ஆா். பழனியப்பன், பொதுச் செயலா் கண்ணன், விவசாயப் பிரிவு மாநிலச் செயலா் மணிவண்ணன், மாமன்ற உறுப்பினா் ஹைஜாகனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருவையாறு: திருவையாறு அருகே கண்டியூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். இதில், வடடாரத் தலைவா்கள் ராஜாங்கம், அறிவழகன், மாவட்டப் பொருளாளா் ஆா்.எம். ராஜ், மேலத்திருப்பூந்துருத்தி நகரத் தலைவா் உஜ்வல்தீப் காடேராவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.