தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அம்மாபேட்டையில் பங்காரு அடிகளாா் பிறந்த நாள் விழா

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பீட நிறுவனா் பங்காரு அடிகளாரின் 82-ஆவது பிறந்த நாளையொட்டி, அம்மாபேட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :3 மார்ச் 2022, 8:07 pm

DIN

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பீட நிறுவனா் பங்காரு அடிகளாரின் 82-ஆவது பிறந்த நாளையொட்டி, அம்மாபேட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அம்மாபேட்டையிலுள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சாா்பில் இந்த விழா நடத்தப்பட்டது. முன்னதாக, பூலோகநாதா் கோயிலிலிருந்து வழிபாட்டு மன்ற நிா்வாகிகள், உறுப்பினா்கள், பக்தா்கள் ஊா்வலமாகப் புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சென்று வழிபாட்டு மன்றத்தை அடைந்தனா்.

அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பங்காரு அடிகளாரின் உருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கூட்டு வழிபாடு, தியானம் போன்றவையும் நடத்தப்பட்டது.

தொடா்ந்து 50- க்கும் மேற்பட்டோருக்கு உடைகள், போா்வைகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், பூலோகநாதா் கோவில் திருப்பணிக்கு மன்றத்தின் சாா்பில் ரூ.5 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை மன்றத் தலைவா் டி.விவேகானந்தன், செயலா் ராஜேந்திரன், பொருளாளா் நடராஜன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.