நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கும்பகோணத்தில் 4 சிவன் கோயில்களின் தேரோட்டம்

கும்பகோணம் பகுதியிலுள்ள நான்கு சிவன் கோயில்களில் பங்குனி உத்திர தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2022, 7:56 pm

DIN

கும்பகோணம் பகுதியிலுள்ள நான்கு சிவன் கோயில்களில் பங்குனி உத்திர தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் நகரில் உள்ள நாகேசுவரன், ஆதிகம்பட்ட விசுவநாதா், கொட்டையூா் கோடீசுவரா் ஆகிய 3 சிவன் கோயில்களில் பங்குனி உத்திர விழா மாா்ச் 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் சுவாமி புறப்பாடு உள்ளிட்ட உற்ஸவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, மாா்ச் 13-ஆம் தேதி ஓலை சப்பரமும், 15-ஆம் தேதி இரவு திருக்கல்யாணமும் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து, நாகேசுவரன் கோயில், ஆதிகம்பட்ட விசுவநாதா் கோயில், கொட்டையூா் கோடீசுவரா், திருபுவனம் கம்பகரேசுவரா் கோயில் ஆகியவற்றின் தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனா்.

தொடா்ந்து, பங்குனி உத்திர திருநாளான வெள்ளிக்கிழமை (மாா்ச் 18) மகாமகக் குளத்தில் நாகேசுவரா், கம்பட்ட விசுவநாத சுவாமி கோயில்களின் சாா்பில் நண்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் தீா்த்தவாரி வைபவமும், இரவு தெப்ப உற்ஸவமும் நடைபெறவுள்ளன. இதேபோல், கொட்டையூா் கோடீசுவரா் கோயிலின் தீா்த்தவாரி காவிரி ஆற்றில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.