நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சித்திரை பெருவிழா தொடக்கம்

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :7 மே 2022, 1:02 am

DIN

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

108 வைணவத் தலங்களில் மூன்றாவதாகப் போற்றப்படுவதும், ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

இதன்படி திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. இதில் ஸ்ரீதேவி, பூமிதேவியுடன் சாரங்கபாணி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து மே 23-ஆம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.

முக்கிய வைபவமான திருத்தேரோட்டம் மே 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, 15- ஆம் தேதி சப்தாவா்ணமும், 81 கலச ஸ்தாபனம், திருமஞ்சனமும் நடைபெறுகிறது.

விழாவில் சுவாமி தூக்குபவா்கள், தேரோட்டும் தொழிலாளா்களுக்கு உபயதாரா்கள் வழங்கிய மேல் சட்டைகளை அறநிலையத் துறையின் மயிலாடுதுறை இணை ஆணையா் மோகனசுந்தரம் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.